செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் 4-வது மைன் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியின் வெளிப்புறம் உள்ள மரம் பட்டு போன் நிலையில் உள்ளது, அந்த மரத்தின் கிளைகள் சாலையில் உள்ள மின் கம்பத்தின் மின்சார வயரில் உரசி வருகிறது. பலத்த மழை பெய்தால் கண்டிப்பாக இந்த மரம் கிழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே மரத்தை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.