சென்னை திருவல்லிக்கேணி ஔலியா சாகிப் 3-வது தெருவின் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குழந்தைகள், பெண்கள் இந்த இடத்தை கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகிறார்கள். சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய உடனடி நடவடிக்கை தேவை.