செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 திருட்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. நந்தா மெஜஸ்டிக் அவென்யூ குடியிருப்பில் மட்டும் ஒரே நாளில் 2 வீடுகளிலும், 3 நாள் இடைவெளியில் மற்றொரு வீட்டிலும் பூட்டை உடைத்து பணம் திருடு போயுள்ளது. அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் வீடுகளில் தனியே இருக்கும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். நிம்மதியாக உறங்கவும், ஊருக்கு சென்றால் பொருட்கள் திருடு போய்விடுமோ என்னும் பயத்தில் இப்பகுதி மக்கள் ஊருக்கு செல்வதையே தவிர்த்து வருகிறார்கள். தொடரும் திருட்டு சம்பவங்களுக்கு போலீஸ் துறையால் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?