செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் நீலமங்கலம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் இருக்கும் மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. இது போல் இந்த பகுதிகளில் உள்ள பல மின் கம்பங்கள் பழுதடைந்தும், மின் விளக்குகள் எரியாமலும் உள்ளன. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டுகிறோம்.