செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் நீலமங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடங்களை வரிசையாக அடுக்கி வைத்து இன்றாவது குடிநீர் கிடைக்குமா? என ஏக்கத்தில் மக்கள் காத்திருக்கின்றனர். சரியான முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாததால் காத்திருப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசிய தேவையான குடிநீரை இப்பகுதி மக்களுக்கு சீரான இடைவெளியில் கிடைத்திட வழி செய்யப்படுமா?