வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-25 14:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் கிழக்கு கடற்கறை சாலையானது அடையாளச்சேரி, கூவத்தூர், வட பட்டினம், தென்பட்டினம் ஆகிய கிராமங்களின் வழியாக செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் முட்செடிகள் நீண்டு வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையோரமாக செல்லும்போது காயம் ஏற்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றோம்.

மேலும் செய்திகள்