நடவடிக்கை தேவை

Update: 2022-09-23 14:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் திருக்கோவில், கைலாசநாதர் திருக்கோவில், உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தாகத்தை தீர்ப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்