சுவரோட்டிகளால் அவதி

Update: 2022-09-22 14:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஊராட்சிகளில் வரவேற்புடன் கூடிய ஊர் எல்லைப் பலகைகள் இல்லை. இருக்கின்ற சில ஊர்களின் எல்கைகளில் உள்ள சிமென்ட் அறிவிப்பு பலகைகளிலும் மக்கள் பலவிதமான சுவரொட்டிகளை ஒட்டி ஊரின் பெயரை மறைத்து விடுகின்றனர். இதனால் அந்த வழியாக வரும் வெளியூர் பயணிகள் இடம் தெரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். எனவே ஊராட்சி துறை அதிகாரிகள் அனைத்து ஊராட்சிகளின் எல்லைகளிலும் வரவேற்பு மற்றும் நன்றி அறிவிப்பு பலகைகளை அமைத்து முறையாக அவற்றை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்