குழியை மூடவேண்டும்

Update: 2022-09-20 13:57 GMT

மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாள்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. பராமரிப்பு பணி முடிந்த பின்னர் அந்த குழிைய மூடாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு குழி இருப்பது தெரியவில்லை. எனவே விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிர்ப்பலி ஏற்படும் முன் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்