சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-19 14:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் கானத்தூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கானத்தூர் கிராமம் செல்லும் தார்சாலையானது முற்றிலும் சேதமடைந்து மேடு பள்ளமாக காணப்படுகிறது. பழுதடைந்த இந்த சாலைவழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் பெரும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். எனவே சீரான சாலைக்கு வழி வகுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்