செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதிதாக வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டன. இவை கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமலே உள்ளது. இதனால் நெல், உரங்கள், மற்றும் மானிய விலையில் விதைகள் முதலியவை வாங்குவதற்கு விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். எனவே உடனடியாக வேளாண்மை விரிவாக்க மையத்தை திறப்பதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.