செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் மலைமகள் தெருவில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி சாலையில் வழிந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பொதுமக்கள் தெருவில் நடந்து செல்லவும் இடையூராக அமைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகாலை சரி செய்ய வேண்டும்.