சென்னை குரோம்பேட் ஹஸ்தினாபுரம், நேதாஜி நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்குகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. குழந்தைகள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் நோய் தொற்று பரவும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.