மோசமான நிலையில் மின்கம்பம்.

Update: 2022-09-13 14:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் செம்பாக்கம், பெரிய இரும்பேடு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் இருக்கும் மின்கம்பம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. அந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. மேலும் மின் கம்பத்தில் உள்ள வயர்கள் தாழ்வாக தொங்கியும், வயலில் விழுந்தவாரும் ஆபத்தாக கிடக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்