சென்னை அடையாறு இந்திரா நகர் 16-வது குறுக்குத் தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலம் நெருங்கி வருவதால் மழைநீரும், கழிவுநீரும் கலப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே சேதமடைந்த கால்வாய் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.