செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மழைநீரில் நடந்து தான் பள்ளிக்கு வருகின்றனர். மேலும், சற்று முன் பெய்த மழையில் பள்ளி பாட புத்தகங்கள் அனைத்தும் நனைந்து விட்டது. மேலும் பள்ளியின் தரைத்தளமும் மொசமான நிலையில் உள்ளதால் மழைநீர் எளிதில் தேங்கிவிடுகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.