சென்னை பெசன்ட் நகர் 1-வது அவென்யூ சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள். மேலும் இந்த சாலை விபத்துகள் ஏற்படும் பகுதியாகவும் மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்ந்த சாலையை சீரமைக்க வேண்டும்.