சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையயெங்கும் பரவி வருகிறது. இதனால் அந்த சாலையே அலங்கோலமாக காட்சி தருவதுடன், அந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையிலும் இருக்கிறது. கழிவிநீர் அகற்றும் வாரியம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமா?