நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த வேளாங்கண்ணி பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,வேளாங்கண்ணி