திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, வெள்ளவேடு பஸ் நிறுத்தத்தில் பல வருடங்களாக பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே பயணிகளின் நலன் கருதி மேற்கூறிய பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.