சென்னை புளியந்தோப்பு பார்த்தசாரதி தெருவில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. சாலையில் ஓடும் கழிவுநீர் பள்ளத்தில் தேங்குவதால் துர்நாற்றம் வீசி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.