செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிகளிலிருந்து பூந்தமல்லி செல்ல (தடம் எண்: 66) இயக்கப்படுகிறது. ஆனால் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பஸ்சில் கூட்டம் அலை மோதுகிறது. முக்கியமாக பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகத்துக்கு ஏற்ப எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ்சில் மாணவர்கள் தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்