சேலம் மாவட்டம் கந்தம்பட்டி ரெயில்வே பாலத்தின் அருகே பைபாசில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் சாலையோரத்தில் மழைநீர் செல்ல இரும்பு குழாய்களை கொண்டு மூடி உள்ளனர். இந்த இரும்பு குழாய்கள் சேதமடைந்து உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த இரும்பு குழாய்களை சீரமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-மணிகண்டன், பெருமாள், சேலம்.