காஞ்சீபுரம் மாவட்டம் மடம் தெருவில் உள்ள கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இதனால் கழிவுநீர் செல்லமுடியாமலும், துர்நாற்றம் வீசியும் அந்த பகுதியே அசுத்தமாக மாறி வருகிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.