செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் படூர் மெயின் ரோடானது கால்நடைகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் இந்த சாலையில் உறங்கி வருவதால் விபத்து ஏற்படும் பகுதியாக இந்த இடம் மாறி வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் கால்நடைகளின் நலன் கருதி சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை.