மின்கம்பத்தில் செடி, கொடிகள்

Update: 2022-09-02 12:53 GMT

அந்தியூர் சிவசக்தி நகரில் செல்லீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மின் கம்பத்தை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து உள்ளன. செடி, கொடிகள் படர்ந்து உள்ளதால், மின் கம்பத்தில் உள்ள தெருவிளக்கின் வெளிச்சம் வீதியில் விழுவதில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் அச்சத்தில் நடமாடுகிறார்கள். மேலும் மழைக்காலம் என்பதால் மின் கம்பத்தில் உள்ள செடி, கொடிகளை யாராவது தொட்டால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பத்தில் படர்ந்து உள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்