சென்னை ஓட்டேரி அருந்ததி நகரில் உள்ள கோவிந்தன் தெருவில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. வடிகால்வாய் அமைக்கும் இடத்தில் மின் இணைப்பு பெட்டிகள் இருப்பதால் தற்காழிகமாக கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு பெட்டியை அகற்றி வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைவில் முடிப்பதற்கு வழி செய்ய வேண்டும்.