'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2022-08-31 17:39 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சர்க்கரை ஆலை பெட்ரோல் பங்க் அருகே சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து இருந்தது. இந்த சீமைக்கருவேல மரங்கள், முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்ககோரி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாலை பணியாளர்கள், சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் 'தினத்தந்தி' மற்றும் சாலை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

-ராஜா, மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்