'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-08-31 17:36 GMT

சேலம் சீலநாயக்கன்பட்டி 60-வது வார்டில் திருச்சி மெயின் ரோட்டில் தட்சிணாமூர்த்தி கோவில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். உடைந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-சூர்யா, சேலம்.

மேலும் செய்திகள்