தாம்பரம் பஸ் நிலையத்திலிருந்து பூந்தமல்லி சென்று வர (தடம் எண் : 66 மற்றும் 166) போன்ற பஸ்கள் போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எழும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பணி முடிந்து வரும் மக்கள் இரவு நேரத்தில் மின்சார ரெயில் மூலம் தாம்பரம் வருகிறார்கள். ஆனால் இரவு 11 மணிக்கு மேல் மிகவும் குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி இரவு நேரத்தில் பூந்தமல்லி வரை இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.