செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் (தடம் எண் 22 ஏ.எல்.எஸ்.எஸ்) என்ற நகர பஸ் பெரும்பாலான நாட்களில் (தடம் எண் 504) என்று மாற்றப்பட்டு தாம்பரம்-திண்டிவனம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இதனால் உத்திரமேரூர் பகுதி மக்கள் செங்கல்பட்டு செல்லும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ் நகர பஸ் என்பதால் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் என தெரிவிக்கும் ஸ்டிக்கர் இதுநாள் வரை ஒட்டப்படாமலே உள்ளது. மேற்கூறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வழி காணப்படுமா?