செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் செக்ரட்டேரியட் காலனி மீனாட்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சாலை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் கடைவீதிக்கு செல்வதற்கு கூட இந்த பகுதி மக்கள் சங்கடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குழ்ந்தைகள் கழிவுநீரில் நடந்து செல்வதால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.