செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழை நீரானது குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம், ஆதனூர், ஒரத்தூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இனிவரும் மழை காலங்களில் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை தேவை.