செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் பஸ்கள் ஊருக்கு உள்ளே சென்று குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி செல்கிறது. இந்த நிலையில் பஸ் செல்லும் ஊர் பகுதிகளின் சாலையானது குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பஸ்கள் குலுங்கி செல்லும்போது முதியோர்கள், பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே தாம்பரம், பல்லாவரம் வழியே குன்றத்தூர் செல்லும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.