செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் உள்ள சூனாம்பேடு அருகே, மதுராந்தகம் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்த சாலை பெரியக் களக்காடியில் இருந்து அச்சிறுப்பாக்கம் வரை செல்கிறது. இந்த சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் வளைவு பகுதியில் திரும்பும்போது விபத்தில் சிக்குகிறது. பெரிய விபத்து ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.