செங்கல்பட்டு மாவட்டம் கிருஷ்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையிலேயே தேங்கி விடுகிறது. சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால்வாயை தூர்வாரி பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.