டாஸ்மாக் கடைகளை மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2022-08-27 16:30 GMT


தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் மாநகரம் மேம்பாலம் அருகில் ரெயில்வே புதுரோட்டிலிருந்து புதிய பஸ்நிலையம் செல்லும் சாலையின் அருகில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன.இதனால் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும் செய்திகள்