'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-08-27 16:06 GMT

சேலம் சூரமங்கலம் அருகே தர்ம நகர் முதல் தெருவில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மீன்கழிவுகளை அகற்றாமல் ஆங்காங்கே சாக்கடை கால்வாயில் தேங்கி கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மீன்மார்க்கெட்டை சுத்தம் செய்து சாக்கடை கால்வாயில் கழிவுகள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-செந்தில், சூரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்