பூதலூர் ஒன்றியம் மேலத்திருவிழாப்பட்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் படர்ந்து விரிந்து சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுப் பாசன பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள மேலத்திருவிழாபட்டி ஏரிக்கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,பூதலூர்.