புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

Update: 2022-08-25 15:23 GMT

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிங்கிரிப்பட்டி, இந்திரா நகர் காலனியில் மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-சீ.சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்