சென்னை கொரட்டூர் அன்னைநகர் வடக்கு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சாலை முழுவதும் பள்ளங்களுடன் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் அவற்றில் தேங்கி விடுகின்றன. இதனால் அப்பகுதியின் வழியாக செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.