சேலம் அஸ்தம்பட்டியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் பின்புறம் வடிகால் மற்றும் ஏராளமான கழிவுபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு கொசு மற்றும் பூச்சிகள் அதிகரித்து தொல்லையாக இருந்தது. இதனால் தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் கடும் அவதிப்பட்டனர் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் கழிவுபொருட்களை அகற்றி தூய்மையாக வைக்க செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், புகாருக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-ரகிமுல்லா, அஸ்தம்பட்டி, சேலம்.