மின்கம்பத்தை சீரமைப்பார்களா?

Update: 2023-08-13 13:51 GMT

ராணிப்பேட்டை காரை பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டி உள்ள சுடுகாட்டுக்கு அருகில் மின்கம்பம் சிதிலமடைந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால், இடிந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. சுடுகாடு எரிமேடைக்கு சடலங்களை எடுத்து வரும் பொதுமக்களுக்கும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்