மின் விளக்குகள் பொருத்தப்படுமா?

Update: 2024-08-04 19:52 GMT

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் விரைவு பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உயர்கோபுர மின்விளக்கு கம்பம் உள்ளது. அந்தக் கம்பத்தில் 6 மின்விளக்குகள் இருந்தன. அவற்றில் சில மின் விளக்குகள் பழுதானது. அதனை சரி செய்வதற்காக அகற்றப்பட்ட மின்விளக்குகள் மீண்டும் பொருத்தப்படவில்லை. அதனால் இரவில் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் விளக்குகளை உடனடியாக பொருத்த நடவடிக்கை எடுப்பார்களா?

-நாகராஜன், வேலூர்.

மேலும் செய்திகள்