நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட ராமகிருஷ்ணர் தெரு, தம்மா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட அச்சமாக உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எரியாத தெருவிளக்குகளை உடனே எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இல.குருசேவ் கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.