ஆரணி தாலுகா கெங்கைசூடாமணி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்குள்ள ஒரு சில தெரு மின்விளக்குகள் எரியவில்லை. குழந்தைகள் தெருவில் விளையாட, படிக்க முடியவில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, கெங்கைசூடாமணி.