மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2024-06-16 19:47 GMT

வேலூர்-காட்பாடி சாலையில் பாலாற்றின் குறுக்கே உள்ள அண்ணா பாலத்தில் நடுவே ஒருசில மின் விளக்குகள் எரியவில்லை. இருள் சூழ்ந்த பகுதியில் நடைபாதையில் அமர்ந்து சிலர் மதுபானம் குடிக்கின்றனர். காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். பாலத்தில் எரியாத மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராஜ், விருதம்பட்டு.  

மேலும் செய்திகள்