மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2023-05-24 12:36 GMT

வந்தவாசி நகராட்சி கட்டுப்பாட்டில் புதிய பஸ் நிலையம் உள்ளது. அது, கலைஞர் புதிய பஸ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். பஸ் நிலையம் முழுவதும் மின்விளக்குகள் சரியாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ் நிலையம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகளும் சரியாக எரியவில்லை. இதனால் பல குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பயணிகளும் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தன், வந்தவாசி.

மேலும் செய்திகள்