மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2022-11-13 12:49 GMT

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த சோழவரம் கிராமம் 8-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் மின்விளக்குகள் 20 நாட்களாக எரியவில்லை. இரவில் விஷ பூச்சிகள் நடமாடுகின்றன. இதனால் முதியோர், சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மின் கம்பத்தைச் சுற்றி செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை எரியவிட வேண்டும். மின்கம்பத்தை சுற்றிலும் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும்.

-வேல்முருகன் சமூக ஆர்வலர், சோழவரம். 

மேலும் செய்திகள்