தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-09-20 12:54 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வீரராகவபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்கம்பம் சாய்ந்துகிடந்தது. இதுகுறித்து கடந்த திங்கட்கிழமை தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. செய்தி வெளியானதை தொடர்ந்து மின்சாரத் துறை ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு சாய்ந்த மின்கம்பத்தினை சரி செய்தனர். இதற்காக செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், துரித நடவடிக்கை எடுத்த மின்சார துறைக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்